சென்னையில் நீலம் புயல் கரையைக் கடந்த போது காணாமல் போன கப்பல்
ஊழியர்களில் 5வது நபரின் உடலும் கிடைத்துள்ளது. சென்னை மீஞ்சூர் அருகே கரை
ஒதுங்கிய அவரது உடல் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளது.
நீலம் புயல் காரணமாக நிலை தடுமாறி, சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை ஓரம்
ஒதுங்கிய பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்கள் 5 பேர் காணாமல் போயினர்.
அவர்களில் 4 பேரின் சடல்கள் நேற்று மீட்கப்பட்ட நிலையில் இன்று 5வது நபரின்
உடலும் கிடைத்துள்ளது.